5 ஏக்கர் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன: வேதனையில் விவசாயி தற்கொலை

கஜா புயல் பாதிப்பால் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்து தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் வேதனையில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த சோழகன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தென்னை விவசாயியான இவர், 5 ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பு வைத்து பராமரித்து வந்தார்.

தன் சொந்த பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை மரங்கள் அனைத்தும் கஜா புயல் தாக்கத்தால் கடும் சேதத்தை சந்தித்தது. இதில், அனைத்து தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட, விவசாயி சுந்தர்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

தனது 5 ஏக்கர் தென்னந்தோப்பினால் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் குடும்ப தேவைக்கு பூர்த்தி செய்து வந்ததாகவும், கஜா புயல் காரணத்தால் தென்னை மரங்கள் அனைத்தும் அடியோடு அழிந்ததாலும் சுந்தர்ராஜ் கடந்த 6 நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுந்தர்ராஜ் அவரது வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டிற்கு சென்று அங்கே விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம்ப அப்பகுதயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு தென்னை மரத்துக்கு ரூ.600 மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த தொகை மிகவும் குறைவானதாக இருப்பதாக எண்ணியே சுந்தர்ராஜ் தற்கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
chennai-businesswoman-reeta-lankalingam-commits-suicide
சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை?
Army-officer-shot-dead-by-army-man-in-Chennai-military-quarters
சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்
boxer-swims-2.5-km-in-flood-water-to-attend-event-and-finally-wins-silver-medal
தலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்
Mettur-dam-will-be-opened-tomorrow-for-delta-irrigation
மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு
3-lakhs-cusecs-water-release-in-cauvery-river-Mettur-dam-level-increased
மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்
Mumbai-hotel-charged-their-guest-Rs-1700-for-2-boiled-eggs
இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...
Groom-murder-to-his-father
கல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..! தந்தையை அடித்துக்கொன்ற புதுமாப்பிள்ளை
Rowdy-vallarasu-killed-police-encounter-at-Chennai-Madhavaram
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
Hindu-Religious-and-Charitable-Endowments-Department-conduct-a-study-in-sathuragiri-temple
உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்
3-persons-arrested-for-jewelery-worth-Rs-11-crore-robbery-in-toll-gate
சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது
Tag Clouds