முதல் இடத்தில் இந்தியா..கேரளாவும் ஒரு காரணம் –உலக வங்கி

வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்  தங்கள் நாட்டில் வாழும்  உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது வழக்கம். அந்த வகையில், உலக நாடுகளில் வாழும் இந்தியர்களால் கடந்த 2018ல் மட்டும், இந்தியாவுக்கு 79 பில்லியன் டாலர் அளவில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால், கடவுளின் தேசம் கண்ணீரிலும் தண்ணீரிலும் தத்தளித்தது. மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சுமார் 483 பேர்  உயிரிழந்தனர். கேரளாவைப்  புரட்டிப் போட்ட வலராறு காணாத வெள்ளம் உலக நாடுகளின் உதவிக் கரங்களை நீட்டச் செய்தது. கேரளாவும் வெள்ளத்தில் இருந்து மீண்டு புத்துயிர் பெற்றுவிட்டது. கேரளா வெள்ளத்தின் போது, இந்தியாவுக்கு அதிகளவில் பணம் அனுப்பப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து அதிக பணப்பரிமாற்றம் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட தகவலில்,’ 2018ல், 79 பில்லியன் டாலர் அளவில் இந்தியாவிற்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த 2017ல் 65.3 பில்லியன் டாலர் அளவில் இருந்தது. கேளாரா வெள்ள பாதிப்பை அடுத்து இந்த ஏற்றம்.  இந்தியாவைத்  தொடர்ந்து,  சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுங்கள் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. 

 

பாசக்கார இந்தியர்கள்.. தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds