பரீட்சையில் காப்பியடிப்பதை தடுக்க ஷு, சாக்ஸ் அணிய தடை!

பீகாரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்வு அறைக்கு ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Feb 19, 2018, 20:22 PM IST

பீகாரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்வு அறைக்கு ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக அளவு மாணவர்கள் காப்பியடிப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், 1,000 மாணவர்கள் பிடிபட்டனர்.

அதுபோலவே போலி தேர்வு கண்காணிப்பாளர்கள் 24 பேரும் சிக்கினர். அதைவிட, கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு 42 வயது என்பது பின்னர் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

அங்கு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க “ஷு மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்படுவதாகவும், செருப்பு மட்டுமே அணிந்து தேர்வு அறைக்குள் வர அனுமதிக்கப்பட்டு உள்ளதாக”வும் பள்ளி தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

You'r reading பரீட்சையில் காப்பியடிப்பதை தடுக்க ஷு, சாக்ஸ் அணிய தடை! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை