இந்தியாவில் 11,439 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 377 ஆக அதிகரிப்பு

நாட்டில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 377 ஆனது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் நேற்று வரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9,152 இருந்தது. 308 பேர் பலியாகியிருந்தனர். 856 பேர் குணமடைந்திருந்தனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது.


அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 2687 பேர், டெல்லியில் 1564 பேர், தமிழ்நாட்டில் 1204, ராஜஸ்தான் 1034, மத்தியப் பிரதேசம் 730, குஜராத் 695, உ.பி. 660, கேரளா 387 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த 5 பேரும் 1984ம் ஆண்டில் நடந்த போபால் விஷவாயு சம்பவத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளதால் கொரோனா அபாயம் அதிகமிருப்பதாகக் கடந்த வாரமே ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.

நாட்டில் தற்போது கொரோனா சிகிச்சைக்கென 600 மருத்துவமனைகள் உள்ளன. ஒரு லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன. மேலும் 12 ஆயிரம் ஐ.சி.யு வார்டுகளும் தயாராக உள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds