அகமதாபாத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..

Fire breaks out at a factory in GIDC (Gujarat Industrial Development Corporation) in Sanand area of Ahmedabad.

by எஸ். எம். கணபதி, Jun 24, 2020, 12:47 PM IST

அகமதாபாத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சனாந்த் பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், இன்று காலையில் ஒரு தொழிற்சாலையில் தீப்பற்றியது.


சில நிமிடங்களில் ஆலை முழுவதும் தீ பரவியது. இதையடுத்து, தீயணைப்பு படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 25 தண்ணீர் லாரிகளுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக இது வரை தகவல் வரவில்லை.

You'r reading அகமதாபாத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை