மாட்டை வேட்டையாடிய சிங்கக் கூட்டம்... படம் பிடித்த கும்பல் கைது!
மாட்டை வேட்டையாடிய சிங்கக் கூட்டம்...
குஜராத் மாநிலத்தில் முறைகேடாக வனத்திற்குள் நுழைந்து, சிங்கக் கூட்டம் மாட்டை வேட்டையாடும் காட்சிகளை படம் பிடித்த 12 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் ஜூனாகரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிக்குள் சுற்றி பார்க்க சென்றுள்ளது. அதே பகுதியை சேர்ந்த 2 பேர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளனர்.
அந்த கும்பல் காட்டிற்குள் சென்று கொண்டிருந்த போது 3 சிங்கங்கள் சேர்ந்து ஒரு மாட்டை வேட்டையாடியுள்ளது. இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்து, இணையதளத்தில் அந்த கும்பல் பதவி ஏற்றம் செய்துள்ளது.
வீடியோ காட்சிகளை பார்த்த வனத்துறையினர், இதுகுறித்து ஜூனாகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அனுமதியின்றி முறைகேடாக காட்டிற்குள் சென்றதாகக் கூறி அந்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading மாட்டை வேட்டையாடிய சிங்கக் கூட்டம்... படம் பிடித்த கும்பல் கைது! Originally posted on The Subeditor Tamil
More India News