அணைகளை பாதுகாக்க தமிழகத்துக்கு ரூ.543 கோடி ஒதுக்கீடு

நாட்டின் ஏழு மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாக்க ரூ.3466 கோடியும், இதில் தமிழகத்துக்கு ரூ.543 கோடியும் ஒதுக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள முக்கிய அணைகளை பாதுகாத்து பராமரிப்பதற்காக த்திய அரசு உலக வங்கியுடன் கைகோர்த்து திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 198 அணைகள் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

இதற்காக, ரூ.3466 செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்களுக்கு குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது.

குறிப்பாக, ரூ.2628 கோடியை உலக வங்கியும், ரூ.747 கோடி சம்பந்தப்பட்ட மாநிலங்களும், மீதம் ரூ.91 கோடியும் மத்திய நீர் ஆணையம் அளிக்கும். இதில், தமிழக அணைகள் பாதுகாப்புக்கு ரூ.543 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைதவிர, அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளமும் உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளத்தை ரூ.3000ல் இருந்து ரூ.4500 ஆகவும், சிறிய அங்கன்வாடி மையங்களின் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.2250ல் இருந்து 3500 ஆகவும், அங்கன்வாடி உதவியாளர் சம்பவளம் ரூ.1500ல் இருந்து ரூ.2250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.250ம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds