மாவோயிஸ்ட் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானார். அவருடன் இரண்டு காவல்துறையினரும் உயிரிழந்துள்ளனர்.


இதுபற்றி கூறப்படுவதாவது:


சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ள தேர்தல் குறித்து செய்தி நிறுவனங்கள் பரபரப்பாக செய்தி சேகரித்து வருகின்றன.


தூர்தர்ஷன் செய்தி நிறுவனத்தின் சார்பில் செய்தியாளர் தீரஜ் குமார், ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு, ஒளிப்பதிவு உதவியாளர் மோர்முக்த் சர்மா ஆகியோர் சத்தீஸ்கருக்கு பணிக்குச் சென்றுள்ளனர். தாந்திவேடா என்று பகுதியிலுள்ள அரண்பூர் கிராமத்தில் முதற்கட்ட தேர்தலின்போதே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


அக்டோபர் 30ம் தேதி, அங்கு காவல்துறையினருடன் செய்தியாளர்களும் சென்றபோது, திடீரென மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஆரம்பித்தது. ஏறக்குறைய 100 நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு, காவல் உதவி ஆய்வாளர் ருத்ர பிரதாப், உதவி காவலர் மாங்கலு ஆகியோர் தாக்குதலுக்கு இலக்காகினர். காவல்துறையினர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். ஒளிப்பதிவாளர் காயத்தினால் பின்னர் உயிரிழந்துள்ளார்.


ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அச்சுதானந்த சாஹு, பணியினிமித்தம் டெல்லியில் வசித்து வந்தார். அவருக்குக் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மனைவி பெயர் ஹிமாஞ்சலி சாஹு. இந்த தம்பதியருக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. எதிர்பாராத நிகழ்வில் கணவரை இழந்துள்ள மனைவி செய்வதறியாது திகைத்துப் போயுள்ளார்.


இந்நிலையில் இத்தாக்குதலுக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. அது சாலை பணி ஒன்றினை குறிவைத்து நடந்தது என்று சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds