மணப்பாறை அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர சப்தம் : மக்கள் அலறியடித்து ஓட்டம்

by Balaji, Dec 21, 2020, 19:42 PM IST

மணப்பாறை அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடுகபட்டி, கல்பாளைத்தான்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை திடீரென பயங்கர சப்தம் ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பயங்கர சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீடுகள் அதிரும் வகையில் ஏற்பட்ட சப்தத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் ஓடி வந்து தெருக்களில் நின்றனர்.

இதே போல் கடைகளில் இருந்த இரும்பு கதவுகளும் அதிர்ந்து போனதால் கடையில் இருந்தவர்களும் அலறி அடித்தபடி வெளியில் ஓடிவந்தனர். என்ன சப்தம் என்னவென்று தெரியாத நிலையில் மக்கள் நீண்ட நேரம் வெளியில் நின்று கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சப்தம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தனர். ஆனாலும் சப்தம் ஏன் ஏற்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

You'r reading மணப்பாறை அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர சப்தம் : மக்கள் அலறியடித்து ஓட்டம் Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை