ரஜினியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜனின் அடடே விளக்கம்!
போராட்டம் கலாட்டாவாக மாறக் கூடாது என்பதே ரஜினியின் குரல்...? - தமிழிசை
தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்த பிறகு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்’ எனக் கருத்து தெரிவித்தார். அத்துடன் போராட்டத்திற்கு சமூக விரோதிகளே காரணம் எனவும் அவர் விமர்சித்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி கலவரத்திற்கு சமூகவிரோதிகள் காரணம் என்பதை திமுக தோழமைக் கட்சிகள் ஏற்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
போராட்டத்தில் பங்கேற்ற மக்களை திமுக தோழமைக் கட்சிகள் கொச்சைப்படுத்துகிறதா எனக் கேட்ட அவர், ‘சமூக விரோதிகளின் வரம்பு மீறலே கலவரத்திற்கு காரணம்’ எனக் குற்றம்சாட்டினார்.
மக்களின் போராட்டம் கலவரமாகக் கூடாது என்பதே ரஜினியின் குரலாகும் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading ரஜினியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜனின் அடடே விளக்கம்! Originally posted on The Subeditor Tamil
More Special article News