சச்சின் என் வேலையை குறைத்துவிட்டார்... - ஓய்வு குறித்து யுவராஜ் சிங் உருக்கம்

ஐபிஎல்லின் நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பான்ட்டின் அதிரடியால் மும்பை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரை நம்பிக்கையுடன் துவங்கியுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். இந்த போட்டி ஆரம்பம் முதலே எதிர்ப்பார்ப்போடு இருந்தது. காரணம் தவான் ஹைதராபாத் அணியில் இருந்து டெல்லிக்கு வந்தது, இந்திய அணியிலும், ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றிலும் இடம் பெற முடியாமல் கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங் ஆகியோர் எப்படி ஆடப்போகிறார்கள் என்பது தான். ஆனால் இருவரும் சிறப்பாகவே விளையாடினர். இந்த ஆட்டத்தில் மும்பை தோற்றாலும் யுவராஜ் அதிரடியாக ஆடி அரைசதமடித்தார். 35 ரன்னில் 53 ரன்களை குவித்தார் யுவராஜ்.

போட்டிக்கு பின் இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், ``கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன. இதனால், தெளிவான முடிவு எடுக்கமுடியாமல் நான் இருந்து வருகிறேன். ஆனாலும் நான் கிரிக்கெட்டை விடவில்லை. நான் 14,16 வயதுகுட்பட்ட கிரிக்கெட்டிலிருந்து ஆடி வருகிறேன். எனக்கு கிரிக்கெட் தான் எல்லாம். என்னால் கிரிக்கெட் ஆட முடியும் என்ற நம்பிக்கை உள்ள வரை ஆடுவேன். எனக்கு நானே ஆய்வு செய்து கொண்டதில் இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம் என எனக்குத் தோன்றியது. அது 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி அதை அனுபவித்து விளையாடுவேன்.

தேசிய கிரிக்கெட் அணியை பற்றி நான் நினைக்கவில்லை. எல்லோரும் ஓய்வு குறித்து கேட்கிறார்கள். சரியான நேரம் வரும்போது, ஓய்வு அறிவிப்பை நான்தான் முதலில் அறிவிப்பேன். யாரும் என் ஓய்வு குறித்து எனக்கு யாரும் நெருக்கடி கொடுக்காதவகையில் ஓய்வை அறிவிப்பேன். என்னுடைய ஓய்வு குறித்து குழப்பமான சூழல் இருந்தபோது, நான் சச்சினுடன் பேசினேன். அப்போது பல்வேறுவிதமான தெளிவான விஷயங்கள், ஆலோசனைகள் எனக்கு கிடைத்தன சச்சினுடன் பேசியது தான் என்னை 37, 38 வயதில் கிரிக்கெட் ஆடும் உத்வேகத்தை தந்தது" எனப் பேசியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds