பெங்களூரு அணிக்கு மரண பயத்தைக் காட்டிய தோனி கடைசி பந்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி!

RCB won on last ball thrill victory against CSK

by Mari S, Apr 22, 2019, 08:22 AM IST

தனியொருவனாக தோனி போராடியும் கடைசி பந்தில் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. மூன்றாவது வெற்றியை பெற்றது பெங்களூரு அணி.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய போட்டியில் கேப்டன் கோலி சொதப்பினாலும், தொடக்க ஆட்டக்காரரான பார்த்திவ் படேல் அபாரமாக விளையாடி 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் வாட்ஸனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

டிவில்லியர்ஸ்(25), அக்‌ஷ்தீப்(24), மொஹின் அலி(26) பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்சன், டூப்ளஸில் தலா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சுரேஷ் ரெய்னாவோ ஸ்டெய்ன் வீசிய பந்தில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

கேதார் ஜாதவ் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய அம்பத்தி ராயுடு 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் தோனி மட்டும் தனி ஒருவனாக அணிக்காக போராடினார். 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசி 84 ரன்கள் குவித்தார்.

சென்னை அணி தோற்றுவிடும் என்ற சமையத்தில் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற தோனிக்கு ஜடேஜா, பிராவோ என யாருமே கை கொடுக்காத நிலையில், கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்த நிலையில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் டிரா 2 அடித்தால் வெற்றி என்ற நிலையில், உமேஷ் யாதவ் வீசிய பந்து தோனியிடம் சிக்காமல் கீப்பர் பார்த்திவ் படேலிடம் சென்றது. மறுமுனையில் இருந்த ஷர்துல் தாக்கூர், வேகமாக ஓடி வராததால், சூப்பர் ஓவருக்கு செல்லாமல் சென்னை அணி கடைசி பந்தில் அவுட்டானது.

கடைசி 2 ஓவரில் விஸ்வரூபம் எடுத்த தோனியின் ஆட்டத்தை பார்த்த பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதல், பெங்களூரு ரசிகர்கள் வரை, அப்செட் ஆகி இருந்த நிலையில், கடைசி பந்தில் அவர்களுக்கு கிடைத்த த்ரில் வெற்றி எதிர்பாராத சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களின் ஆர்டரை மாற்றாமல் போனால், இதுபோன்ற தொடர் தோல்விகளை சந்திக்க நேரிடும்.

நேற்றைய போட்டியில் தோனி ஏன் மிஸ்சிங் தெரியுமா?

You'r reading பெங்களூரு அணிக்கு மரண பயத்தைக் காட்டிய தோனி கடைசி பந்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை