அடுத்த விராட் கோலி அஸ்வினின் திறமை - கிறிஸ் கெய்ல் ஓப்பன் டாக்

chris gayle talks about ashwin and kl rahul

by Sasitharan, Apr 30, 2019, 21:11 PM IST

`கிரிக்கெட் உலகின் அரக்கன்', சிக்ஸ் மெஸின்' என அறியப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் சில காலமாக பார்ம் இல்லாமல் தவித்து வந்தார். இதனால் வரும் உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனால் இப்போது நல்ல பார்மில் இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர் இப்போது ஐபிஎல் போட்டிகளிலும் கலக்கி வருகிறார். பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அவர் தன்னுடன் ஓப்பனிங் இறங்கும் இந்திய வீரர் கேஎல் ராகுல் குறித்து பேசியுள்ளார்.

அதில், ``லோகேஷ் ராகுல் அபரீதமான திறமையுடைய பேட்ஸ்மேன். என் மனதில் எழுந்த சிறந்த வீரராக அவர் இருக்கிறார். விராட் கோலிக்கு பிறகு இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவை செய்பவராக ராகுல் உள்ளார். இதற்காக ராகுல் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. கோலி இடத்துக்கு மிகச்சரியானவர் என்றால் கே.எல்.ராகுல் தான். இருந்தாலும் இதுகுறித்து அவர் சிந்திக்காமல் இருக்க வேண்டும். தான் இதில் ஸ்ட்ராங் என்பதை அறிந்து அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

அஸ்வினை பொறுத்தவரை இந்திய அணியின் மிக முக்கியமான பௌலராக இருந்தவர். அவர் ஒரு உணர்ச்சிகரமான பௌலர். பஞ்சாப் அணியுடன் இரண்டு ஆண்டுகள் விளையாடிவிட்டேன். கேப்டனாக அஸ்வின் மிகுந்த பற்றுதலோடு இருக்கிறார். தன் மீது மட்டுமில்லாமல், அணி மீதும் நிறைய நம்பிக்கை வைத்துள்ளார். ஒரு கேப்டனிடம் இப்படி குணங்கள் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

You'r reading அடுத்த விராட் கோலி அஸ்வினின் திறமை - கிறிஸ் கெய்ல் ஓப்பன் டாக் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை