அஷ்வினும் ஜடேஜாவும் இருப்பது ஞாபகமிருக்கட்டும் விராட்: பயிற்சியாளர் பதிலடி!

by Rahini A, Feb 10, 2018, 12:42 PM IST

"இந்தியக் கிரிக்கெட் அணியில் அஷ்வினும் ஜடேஜாவும் இருக்கிறார்கள் என்பதைக் கேப்டன் விராட் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்" என இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண் பதிலடி கொடுத்துள்ளார்.

ashwin

சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர் என அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டுத் தெரிவித்தார். மேலும் விராட் கூறுகையில், "அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களான சாஹலும் குல்தீப்பும் 2019 உலகக் கோப்பையின் போது அணியின் சிறந்தத் தூண்களாக நிற்பர்" எனப் பாராட்டிக் கூறினார்.

விராட் கோலியின் இந்தப் பதிலளிக்கும் வகையில் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண் கூறுகையில், "கேப்டன் விராட் அணியில் இன்னும் அஷ்வினும் ஜடேஜாவும் இருக்கிறார்கள், 2019 வரையிலும் இருப்பார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

You'r reading அஷ்வினும் ஜடேஜாவும் இருப்பது ஞாபகமிருக்கட்டும் விராட்: பயிற்சியாளர் பதிலடி! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை