செஞ்சுரி அடித்த கேப்டன் ரஹானே முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள்

ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போதைய நிலவரப்படி நல்ல நிலையில் உள்ளது. இன்று ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சை விட இந்தியா 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நேற்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, இந்திய பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சால் 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் யாருமே அரைசதத்தை கூட கடக்கவில்லை. அதிகபட்சமாக லபுஷேன் 48 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். விராட் கோஹ்லிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஹானேவின் கேப்டன்சி தொடக்கம் முதலே சிறப்பானதாக இருந்தது. போட்டி தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அஷ்வினை பந்துவீச அழைத்தது ரஹானேவின் கேப்டன்சியை பறைசாற்றும் வகையில் அமைந்தது. இதன் பின்னர் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மாயங்க் அகர்வாலும், கில்லும் களமிறங்கினர்.

தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் இதன் பின்னர் கில்லுடன் ஜோடி சேர்ந்த புஜாரா ஓரளவு சிறப்பாக ஆடினார். நேற்று ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா 17 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ரஹானே பொறுப்புடன் ஆடி இன்று சதத்தை கடந்தார். கில் 45 ரன்களிலும், ஹனுமா விஹாரி 21 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது இந்தியா, ஆஸ்திரேலியாவை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று சதமடித்ததன் மூலம் கேப்டன் ரஹானே மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். இந்த நூற்றாண்டில் மெல்பேர்ன் மைதானத்தில் சதமடிக்கும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த 1999ல் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது தான் கடைசியாக இந்த மைதானத்தில் சதம் அடித்தார். அதன் பிறகு இந்திய கேப்டன் ஒருவர் மெல்பேர்ன் மைதானத்தில் சதம் அடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
brett-lee-donates-1-bitcoin-for-oxygen-supplies-for-india
`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ!
bcci-clarifies-players-fear
கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்
cricket-player-natrajan-surgery
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு??
Tag Clouds

READ MORE ABOUT :