நாங்குனேரி பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், தி இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இப்போதும் நீடிக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுகவினர் எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. ஒருவேளை, டெல்லியில் உள்ள பாஜக அகில இந்திய தலைமையிடம் ஆதரவு கேட்டார்களா என்று தெரியவில்லை. இது பற்றி, நான் அதிமுகவினரிடம் பேசவில்லை. ஏன் அழைக்கவில்லை என்று அதிமுகவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
நாங்கள்(பாஜக) இப்போது அரசியல்சட்டப்பிரிவு 370 ரத்து விளக்கக் கூட்டம், மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தி விழா ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறோம். அதனால் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. கூட்டணி விஷயத்தில் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

பாஜகவை சேர்த்தால் சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது என்பது தவறான கருத்து. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள்(அதிமுக) அப்படி என்ன பார்த்து விட்டார்கள். நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்த போதும் சரி, திமுக கூட்டணியில் இருந்த போதும் சரி, கிறிஸ்தவர், முஸ்லிம் ஓட்டுகளை பெற்றிருக்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அந்த தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் முடிவு செய்வோம்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
7-people-surrender-in-priest-murder-case-in-nellai-sudalaimada-swamy-temple-crime
நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்
kalakkad-near-country-bombs-5-people-arrest
14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…
welcome-poster-for-sasikala-nellai-aiadmk-executive-terminated
சசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்
heavy-rains-in-nellai-district-floods-in-tamiraparani
நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணியில் வெள்ளம் மணிமுத்தாறு அணை திறப்பு
king-s-visit-to-recover-buried-temple-impressive-near-nellai
மண்ணுக்குள் புதைந்த கோவிலை மீட்க மன்னர் வருகை: நெல்லை அருகே சுவாரசியம்
crop-grazing-fence-police-stole-bike
பயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்..
corporation-expropriates-land-family-struggles-over-water-tank-in-nellai
நிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம்
a-loving-couple-who-sold-their-baby-because-of-poverty
வறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்
selfie-on-top-of-a-train-engine-the-boy-who-died-in-nellai
ரயில் எஞ்ஜின் மேல் செல்ஃபி: நெல்லையில் உயிரிழந்த சிறுவன்
Tag Clouds