போக்குவரத்து விதிமீறல்.. ஒரே வாரத்தில் 35000 வழக்கு.. சென்னை போலீஸ் நடவடிக்கை

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரே வாரத்தில் 35 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

சென்னை தி.நகர், பாரிமுனை உள்பட வர்த்தக மையங்களாக விளங்கும் இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை. பெரும்பாலான நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் வாகன நிறுத்துமிடங்கள் கிடையாது. இதனால், பொது மக்கள் தங்கள் பைக், கார்களை நோ பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து போலீசார் இதை கண்டு கொள்வதில்லை. சில சமயங்களில் வண்டியை எடுத்து கொண்டு போய் விடுவார்கள்.

இந்நிலையில், சென்னை போக்குவரத்து போலீசார் கடந்த வாரம், ஷாப்பிங் மால், ஜுவல்லரிகள், ஜவுளிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர். வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்தும் இடங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும், தங்கள் வாடிக்கையாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாமல் கவனித்து கொள்ள வேண்டுமென்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

இதன்பின், போக்குவரத்து போலீசார் 73 சிறப்பு டீம்களை அமைத்து, தி.நகர் உள்பட முக்கிய இடங்களில் தொடர் சோதனைகளை மேற்கொண்டனர். இதில், வடக்கு மண்டலத்தில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் சராசரியாக 3 ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டன. ஒரு வாரத்தில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் எடுத்து சென்ற பின், உரிமையாளர்கள் ஸ்டேஷனுக்கு சென்று அபராதம் கட்டி வண்டிகளை மீட்க வேண்டும். அபராதம் ரூ.100 என்றால், அதை எடுத்து சென்ற கட்டணமாக ரூ.325 சேர்த்து வசூலித்துள்ளனர். இத்தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :