நெல்லை ஆவினில் பணி வழங்க லஞ்சம் : துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நெல்லை ஆவின் நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு காலியாக இருந்த இளநிலை செயல் அலுவலர், சூபர்வைசர் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 15 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களில் 10 பேருக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தேர்வு செய்யப்பட்டவர்களில் 5 பேர் தகுதியற்றவர்கள் என மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சேர்ந்த முருகேசன் என்பவர் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அப்போதைய ஆவின் உதவி பொது மேலாளர் ரங்கநாததுரை, சித்ரா தேவி,மைதிலி, தனபாலன் ஆகிய நான்கு பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லஞ்சம் கொடுக்காததால் வேலை வாய்ப்பை இழந்த சேர்மத்துரை என்பவர், கூறுகையில் ஆவின் நிறுவனத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணி அமர்த்தி உள்ளனர் . முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் தகுதியான நபர்களை பணியில் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
7-people-surrender-in-priest-murder-case-in-nellai-sudalaimada-swamy-temple-crime
நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்
kalakkad-near-country-bombs-5-people-arrest
14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…
welcome-poster-for-sasikala-nellai-aiadmk-executive-terminated
சசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்
heavy-rains-in-nellai-district-floods-in-tamiraparani
நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணியில் வெள்ளம் மணிமுத்தாறு அணை திறப்பு
king-s-visit-to-recover-buried-temple-impressive-near-nellai
மண்ணுக்குள் புதைந்த கோவிலை மீட்க மன்னர் வருகை: நெல்லை அருகே சுவாரசியம்
crop-grazing-fence-police-stole-bike
பயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்..
corporation-expropriates-land-family-struggles-over-water-tank-in-nellai
நிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம்
a-loving-couple-who-sold-their-baby-because-of-poverty
வறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்
selfie-on-top-of-a-train-engine-the-boy-who-died-in-nellai
ரயில் எஞ்ஜின் மேல் செல்ஃபி: நெல்லையில் உயிரிழந்த சிறுவன்
nellai-smart-city-plan-to-uproot-120-trees-and-plant-elsewhere
நெல்லை ஸ்மார்ட் சிட்டி : 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட திட்டம்
Tag Clouds

READ MORE ABOUT :