ரயில் எஞ்ஜின் மேல் செல்ஃபி: நெல்லையில் உயிரிழந்த சிறுவன்

திருநெல்வேலியில் ரயில் எஞ்ஜின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். தந்தை அதே ரயில் நிலையத்தில் இன்னொரு நடைமேடையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் துறையில் இளநிலை தர ஆய்வாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூரை சேர்ந்த இவர் பணி நிமித்தம் திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.

காலை ரயில் நிலையத்தில் பணிக்கு வந்தவர், தன் மகன் ஞானேஸ்வரனையும் உடன் அழைத்து வந்துள்ளார். 14 வயதான ஞானேஸ்வரன் ஒன்பதாம் வகுப்பு மாணவனாவான். தந்தை வேறு இடத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது ஞானேஸ்வரன் நின்று கொண்டிருந்த ரயில் எஞ்ஜின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளான். அப்போது தன்னையுமறியாமல் உயர் அழுத்த மின் கம்பியை தொட்டுள்ளான். உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து ஞானேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
7-people-surrender-in-priest-murder-case-in-nellai-sudalaimada-swamy-temple-crime
நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்
kalakkad-near-country-bombs-5-people-arrest
14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…
welcome-poster-for-sasikala-nellai-aiadmk-executive-terminated
சசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்
heavy-rains-in-nellai-district-floods-in-tamiraparani
நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணியில் வெள்ளம் மணிமுத்தாறு அணை திறப்பு
king-s-visit-to-recover-buried-temple-impressive-near-nellai
மண்ணுக்குள் புதைந்த கோவிலை மீட்க மன்னர் வருகை: நெல்லை அருகே சுவாரசியம்
crop-grazing-fence-police-stole-bike
பயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்..
corporation-expropriates-land-family-struggles-over-water-tank-in-nellai
நிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம்
a-loving-couple-who-sold-their-baby-because-of-poverty
வறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்
selfie-on-top-of-a-train-engine-the-boy-who-died-in-nellai
ரயில் எஞ்ஜின் மேல் செல்ஃபி: நெல்லையில் உயிரிழந்த சிறுவன்
nellai-smart-city-plan-to-uproot-120-trees-and-plant-elsewhere
நெல்லை ஸ்மார்ட் சிட்டி : 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட திட்டம்
Tag Clouds

READ MORE ABOUT :