தமிழகத்தில் மழை நீடிக்கும்! - வானிலை ஆய்வு மையம்
இன்னும் இரு தினங்களுக்கு மழை நீடிக்கும்...
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்குபருவக் காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும், கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியில் தெற்கு ஆந்திரா பகுதியில் நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.
அடுத்து 48 மணி நேரத்தில் வடதமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமாக மழைப்பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்தை பொருத்த வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன், நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading தமிழகத்தில் மழை நீடிக்கும்! - வானிலை ஆய்வு மையம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News