சென்னையின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மழை

சென்னையில் பலத்த காற்றுடன் மழை

Jul 10, 2018, 21:56 PM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

Rain

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதின் தாக்கம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் திடீரென நல்ல மழை பெய்தது. வளசரவாக்கம், கே.கே.நகர், மந்தைவெளி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு,ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, மதுரவாயல், புறநகர் பகுதிகளான போரூர், தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை, சேலையூர், செம்பாக்கம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

காற்றுடன் கூடிய மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மழை காரணமாக வெப்பம் தணிந்து, இதமான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You'r reading சென்னையின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மழை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை