ஊழலுக்கு ஆதாரம் உள்ளது நீதிக்காக காத்திருப்போம் - எச்.ராஜா

ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம் என்று தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Dec 21, 2017, 18:49 PM IST

ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம் என்று தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

H Raja and 2G

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது. மேலும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா, “குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களைப் பார்த்தோம். இறுதியில் உச்சநீதிமன்றத்தில் நீதி வென்றது.

2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் உரிமங்களை ரத்து செய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ஊழலுக்கு ஆதாரம் உள்ளது நீதிக்காக காத்திருப்போம் - எச்.ராஜா Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை