இன்று மனதுக்கு நெருக்கமான நாள் மட்டுமல்ல, என் வாழ்நாளில் மறக்க இயலாத நாள்: ஸ்டாலின் நெகிழ்ச்சி

Stalin happy over karunanidhi statue unveil function

by Mathivanan, Dec 16, 2018, 22:07 PM IST

கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்ற இன்றைய நாள் மனதுக்கு நெருக்கமான நாள் மட்டும் அல்ல... என் வாழ்வில் மறக்க இயலாத நாள் என திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இன்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்கள், அண்ணா சாலையில் - அண்ணா அறிவாலயத்தில் - அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே திருவுருவச் சிலையாக உருவெடுத்திருக்கிறார்.

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்த, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு, கேரள மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

You'r reading இன்று மனதுக்கு நெருக்கமான நாள் மட்டுமல்ல, என் வாழ்நாளில் மறக்க இயலாத நாள்: ஸ்டாலின் நெகிழ்ச்சி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை