புதிய ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஐந்து கேமராக்களை கொண்ட செல்போன்

புதிய வரவாக ஐந்து கேமராக்களைக் கொண்ட செல்போன்

by Vijayarevathy N, Oct 5, 2018, 21:18 PM IST

செல்போன்களின் பரிணாமம் நாளுக்கு நாள் மனிதனைவிட மாறிக் கொண்டு வருகிறது. அக்காலத்தில் பேசுவதற்கு மட்டும் தயாரிக்கப்பட்ட செல்போன், நாளடைவில் புகைப்படம் எடுக்க உபயோகப்படுத்தப்பட்டது. மனிதர்களின் புகைப்பட மோகத்தால் புகைப்படத்திற்காகவே செல்போன் வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

முதலில் ஒரு கேமரா கொண்ட மொபைல், அதன்பிறகு இரண்டு பக்கமும் கேமரா என கேமராவின் வளர்ச்சியில் தற்போது ஐந்து கேமராக்கள் கொண்ட மொபைல் போன் சந்தையில் வந்துள்ளது.

பின்பக்க கேமிரா, செல்பி கேமிரா என இரண்டு கேமிராக்கள் கொண்ட போன்களை இதுவரை பார்த்திருப்போம். ஆனால் ஒரே ஸ்மார்ட்போனில் ஐந்து கேமிராக்களை கொண்ட செல்போனை பார்த்திருக்கிறீர்களா? ஆம் ஐந்து கேமிரா கொண்ட புதிய மாடல் போன் ஒன்றை எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ என்ற பெயரில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் புதிய பிளாட்டினம் கிரே, மொராக்கன் புளு மற்றும் கார்மைன் ரெட் ஆகிய 3 கண்கவர் நிறங்களில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்பக்கம் இரண்டு செல்பி கேமிரா மற்றும் பின்பக்கம் மூன்று கேமிராக்கள் இந்த புதிய மாடலில் உள்ளது. செல்பி கேமிரா 5எம்பி மற்றும் 8எம்பி தரத்திலும், பின்கேமிரா 16எம்பியில் ஒரு கேமிராவும் மற்ற இரண்டு கேமிராக்கள் 12எம்பியிலும் உள்ளது. 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 6ஜிபி ரேம், மற்றும் 3300 எம்.ஏ.எச் பேட்டரி தரமுள்ள இந்த போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading புதிய ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஐந்து கேமராக்களை கொண்ட செல்போன் Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை