Dec 22, 2020, 21:14 PM IST
இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்துவது குறித்து மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. Read More
Dec 22, 2020, 20:27 PM IST
ஏலக்காய் திருட முயன்ற தொழிலாளியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தோட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர். Read More
Dec 22, 2020, 17:38 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டலக் கால பூஜைகள் நடை பெற்று வருகின்றன. கடந்த மாதம் 16ம் தேதி முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்கின. Read More
Dec 22, 2020, 16:54 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக நாளை கூட்ட தீர்மானித்திருந்த கேரள சட்டசபை கூட்டத்திற்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான் அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 22, 2020, 13:28 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் லண்டனிலிருந்து நேற்று இரவு டெல்லி வந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 22, 2020, 11:59 AM IST
கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது Read More
Dec 22, 2020, 11:24 AM IST
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. Read More
Dec 22, 2020, 11:09 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் Read More
Dec 22, 2020, 10:35 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட மது பார்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் குடிமகன்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. Read More
Dec 22, 2020, 09:50 AM IST
சோம்நாத் சிவன் கோயிலில் 1400 தங்கக் கலசம் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சோம்நாத் சிவன் கோயில் உள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது லிங்கம் இங்குள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு அன்னியர்களால் இடிக்கப்பட்டது. Read More