Apr 6, 2020, 14:00 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5ம் தேதி சுகாதாரத் துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. Read More
Apr 6, 2020, 13:53 PM IST
கொரோனாவை ஒழிப்பதில் இந்தியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, அகல் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, நேற்றிரவு விளக்குகள் ஏற்றப்பட்ட போது, சென்னையில் பல இடங்களில் தீபாவளி போல் பட்டாசுகளையும் வெடித்தனர். Read More
Apr 5, 2020, 12:26 PM IST
கடந்த மார்ச் 25ம் தேதியன்று, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது கொரோனா நோயாளி முதன் முதலாக உயிரிழந்தார். அவர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பதும், அங்குத் தாய்லாந்து நாட்டினர் மூலம் அவருக்கு கொரோனா பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Apr 4, 2020, 13:26 PM IST
விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி 2 ஆக உயர்ந்தது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழகத்தில் 411 பேருக்குப் பாதித்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி கடந்த வாரம் உயிரிழந்தார். Read More
Apr 3, 2020, 14:49 PM IST
கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2020, 14:45 PM IST
கொரோனா ஊரடங்கால் வரிவசூல் பாதிப்பு இருந்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 2, 2020, 13:14 PM IST
இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை மீறி சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். Read More
Apr 2, 2020, 12:03 PM IST
இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன. Read More
Apr 2, 2020, 11:57 AM IST
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 15ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். Read More
Apr 2, 2020, 11:51 AM IST
இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி வருகின்றனர். Read More