Aug 24, 2019, 13:48 PM IST
பக்ரீத் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இயக்குனரும் நடிகருமான சசிகுமார். Read More
Aug 24, 2019, 12:39 PM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது. Read More
Aug 24, 2019, 09:11 AM IST
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்த நடிகர் பிரசாந்த் சமிபகாலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் தான் அந்தாதுன். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே என பலர் நடித்திருப்பார்கள். மேலும் இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா ஒரு பார்வையற்ற பியானோ வாசிப்பாளராக நடித்திருப்பார். Read More
Aug 23, 2019, 14:53 PM IST
காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. இதனால் அணை நிரம்ப இன்னும் 3 அடியே பாக்கியுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்து விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 23, 2019, 14:05 PM IST
தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், எல்லா இடங்களிலும் காவல் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பயப்படத் தேவையில்லை என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமீத் சரண் கூறியுள்ளார். Read More
Aug 23, 2019, 13:44 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார். Read More
Aug 23, 2019, 13:29 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போன்று சென்னையில் ஒரு பெரிய பெருமாள் கோயிலை கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுவார் என்று தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியுள்ளார். Read More
Aug 23, 2019, 12:25 PM IST
தமிழகத்தில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டதால், கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை பலப்படுத்தப்பட்டு கோவை முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
Aug 23, 2019, 10:37 AM IST
தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவிருப்பதாக வந்த தகவலை அடுத்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் கோவையை குறிவைக்கலாம் என்பதால் அந்நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 13:59 PM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினிக்கு , ஒரு மாதம் வழங்கப்பட்டிருந்த பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More