Aug 17, 2019, 13:42 PM IST
கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்று 23 நாட்களை கடந்து விட்டது. மழை, வெள்ளத்தால் அம்மாநிலமே தத்தளிக்கும் நிலையில், அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய முடியாமல் ஒன் மேன் ராஜ்ஜியம் நடத்தி வருவதை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனால் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எடியூரப்பா, அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்து விட்டே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 17, 2019, 11:46 AM IST
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி மொபைல் மற்றும் இணையதள சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. Read More
Aug 16, 2019, 13:35 PM IST
ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. அதே போல், பள்ளிகள் வரும் 19ம் ேததி முதல் திறக்கப்படும் என்று ஏ.என்.ஐ. செய்தி கூறுகிறது. Read More
Aug 16, 2019, 12:41 PM IST
கொல்கத்தாவில் நள்ளிரவு நேரத்தில் போதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல வங்க நடிகையும் பாஜக எம்பியுமான ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 16, 2019, 12:14 PM IST
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும், நிலைமை சீரடைவதற்கும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
Aug 16, 2019, 09:35 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More
Aug 15, 2019, 21:45 PM IST
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Aug 15, 2019, 15:47 PM IST
அதிமுக கூட்டணிக்கு ரஜினி தலைமை ஏற்பாரா அல்லது அதிமுக கட்சிக்கே தலைவராகி விடுவாரா என்ற தமிழக அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. Read More
Aug 15, 2019, 14:38 PM IST
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கனவை நனவாக்கியது போல், ஒரே நாடு, ஒரே தேர்தலும் நாட்டிற்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Aug 15, 2019, 09:56 AM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார். Read More