Jan 9, 2020, 11:44 AM IST
ளியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா். Read More
Jan 8, 2020, 13:11 PM IST
தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்(எஸ்.சி) சேர்க்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்ட உத்தரவிட்டிருக்கிறது. Read More
Jan 8, 2020, 12:38 PM IST
சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது. Read More
Jan 8, 2020, 11:39 AM IST
ஈரானில் இருந்து கிளம்பிய உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 170 பேரும் உயிரிழந்தனர். ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். Read More
Jan 7, 2020, 09:32 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Read More
Jan 7, 2020, 09:02 AM IST
ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Jan 6, 2020, 19:35 PM IST
இசைஞானி இளையராஜா 30 ஆண்டுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில்தான் அலுவலகம் அமைத்து இசை அமைத்து வந்தார். இந்நிலையில் பிரசாத்திலிருந்து அவரை அந்நிறுவனம் வெளியேற சொல்லி உல்ளது. அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் முதன்முறையாக தனது வீட்டில் புதிய படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கி றார் இளையராஜா. Read More
Jan 6, 2020, 14:21 PM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைபெற்ற குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 3, 2020, 08:05 AM IST
வரலாற்று சிறப்பு மிக்க படைப்பான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு மணிரத்தினம் இயக்கும் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிகின்றது. Read More
Jan 2, 2020, 09:34 AM IST
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். Read More