Jun 24, 2020, 13:43 PM IST
கோவில்பட்டி கிளைச் சிறையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் தாமாக வழக்கு எடுத்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். Read More
Jun 24, 2020, 10:55 AM IST
பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். எம்.எஸ். தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி, கை போ சே, சிச்சோர், கேதார்நாத் மற்றும் டிரைவ் போன்ற சிறந்த படங்களில் நடித்துள்ளார். சுஷாந்த்தின் மரண அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீளவில்லை. Read More
Jun 24, 2020, 09:57 AM IST
லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே இணைச் செயலாளர்கள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 23, 2020, 13:08 PM IST
நூறாண்டு காலம் வாழ்க என்ற பாடல் கேட்டிருக்கிறோம் ஆனால் 100 ஆண்டுகள் வாழும் கலைஞர்களைக் காண்பது அரிதிலும் அரிது. மலையாள நடிகர் மற்றும் பாடகருமான பப்புக்குட்டி பாகவதர். இவருக்கு 107 வயது. நேற்று இரவு கேரளாவின் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணத்தால் மரணம் அடைந்தார். Read More
Jun 23, 2020, 13:01 PM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை. Read More
Jun 23, 2020, 10:40 AM IST
இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவுக்கார பெண் சாப்பிடாமல் இருந்து உயிர் விட்டார். Read More
Jun 22, 2020, 10:02 AM IST
இந்தியா, சீனா எல்லைகளில் இருநாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டு வருவதால், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே திடீரென சீனா தனது படைகளைக் குவித்தது. Read More
Jun 21, 2020, 16:56 PM IST
திருமலை தென்குமரி,உன்னைப் போல் ஒருவன்,பட்டிக்காட்டுப் பொன்னையா, அரங்கேற்றம், புதிய வார்ப்புகள் போன்று 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் உஷா ராணி. இவர், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாள திரைப்பட இயக்குனர் என்.சங்கரன் நாயர் என்பவரை மணந்துகொண்டார். Read More