Jul 31, 2019, 13:12 PM IST
சயனக் கோலத்தில் கடைசி நாளான இன்று அத்திவரதரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரிசித்தார். நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். Read More
Jul 31, 2019, 13:04 PM IST
பலாத்கார உ.பி.மாநிலம் உன்னாவ் நகரில் பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்கும் பதிவு செய்துள்ளது. Read More
Jul 31, 2019, 12:55 PM IST
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று முதலமைச்சர் பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். Read More
Jul 31, 2019, 12:47 PM IST
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீதான ஊழல் புகாரை விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Jul 31, 2019, 11:25 AM IST
தமிழ் மொழியை புறக்கணித்து விட்டு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் என்று தபால்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jul 31, 2019, 10:20 AM IST
தமிழக காவல் துறையில் கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு உயர் பதவிகளை வகித்த டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் இன்று ஒய்வு பெறுகிறார். முறுக்கு மீசையுடன், தனது துணிச்சலான மற்றும் அதிரடி நடவடிக்கைகளால் ரவுடிகளை வேட்டையாடியது, வட மாநில கொள்ளைக் கும்பலை கூண்டோடு ஒழித்தது, ஜாதிக் கலவரங்களை கட்டுப்படுத்தியது என பல்வேறு புகழ் களுக்குச் சொந்தக்காரர் தான் டிஜிபி ஜாங்கிட். Read More
Jul 31, 2019, 09:35 AM IST
காபி டே நிறுவனங்களின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. 36 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மங்களூரு நேத்ராவதி ஆற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. Read More
Jul 31, 2019, 09:24 AM IST
முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை எதிர்ப்பது தொடர்பாக காஷ்மீர் தலைவர்கள் மெகபூபா முப்திக்கும், உமர் அப்துல்லாவுக்கும் இடையே ட்விட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது. Read More
Jul 31, 2019, 09:14 AM IST
ராஜஸ்தானில் வெறுப்புணர்வு குற்றங்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, கவுரக் கொலை புரிவோருக்கு மரண தண்டனையும், வெறுப்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட உள்ளது. Read More
Jul 30, 2019, 21:36 PM IST
மாநிலங்களவையில்த் முதலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல், புறக்கணிப்பு நாடகமாடி அதிமுக வெளிநடப்பு செய்து, மசோதா நிறைவேற மறைமுகமாக ஆதரவளித்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். Read More