அஜித்தின் நேர் கொண்ட பார்வை சில சுவாரஸ்ய தகவல்கள்
Exclusive information about ajith movie
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் தல 59 படத்துக்கு ‘நேர் கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தின் தலைப்பு அறிவிக்கும் முதல் பார்வை நேற்றிரவு வெளியானது. இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பொதுவாக அஜித் நடிக்கும் படத்தின் முதல் பார்வையில் அஜித் மட்டும்தான் இருப்பார். ஆனால் இந்தப் படத்தின் முதல்பார்வையில் அஜித்தோடு படத்தின் நாயகிகளும் இடம் பிடித்துள்ளனர்.
பொதுவாக அஜித் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் மட்டுமே இருப்பது வழக்கம் என்பதால், இது முதல்முறை என்று சொல்கிறார்கள். தவிர, மற்றுமொரு சுவாரஸ்ய செய்தி என்னவென்றால், இந்த படத்தை போனி கபூருடன் இணைந்து ஜீ நிறுவனம் தயாரிப்பதால், படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் தான் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளியான பல பெரிய பட்ஜெட் படங்களும் ஜீ தமிழே உரிமை பெற்றிருக்கிறது. விஜயின் மெர்சல், ரஜினியின் 2.0 வரிசையில் அஜித் படத்தையும் கைப்பற்றியிருக்கிறது.
நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டரில் தான் தமிழில் அஜித் வக்கீலாக நடிக்கிறார். அஜித்தின் மனைவியாக வித்யா பாலன், வழக்கில் சிக்கிக் கொள்ளும் முன்று பெண்கள் கேரக்டரில் ஸ்ரதா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் அண்ட்ரியா நடிக்கிறார்கள். தவிர மற்ற கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே, அர்ஜூன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக அஜித்தின் கால்ஷீட் வெறும் 20 நாட்களே. படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடந்துவருக்கிறது.
You'r reading அஜித்தின் நேர் கொண்ட பார்வை சில சுவாரஸ்ய தகவல்கள் Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :