ஜன்னலில் மறைந்திருந்து பார்க்கும் ஆண்ட்ரியா.. கொரோனா ஊரடங்கில் புது முயற்சி..
Andrea does an innovative photoshoot
ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம். தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்த ஆண்ட்ரியா தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். நடிப்பு தவிரப் பாடல்களும் பாடி இருக்கிறார். தனி ஆல்பமும் வெளியிட்டுள்ளார். இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். இந்த சமயத்தில் புது முயற்சி ஒன்றில் ஈடுபட்டார் ஆண்ட்ரியா. வீட்டிலிருந்தபடியே புகைப்படத்துக்குக் கண்ணாடி ஜன்னல் வழியாக போஸ் கொடுத்தார். அதனைப் புகைப்பட நிபுணர் சுந்தர் ராமு அவரது வீட்டிலிருந்து எடுத்தார்.
இதுபற்றி அவர் கூறும் போது,கொரோனா காலத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்து போடோஷுட் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து ஆண்ட்ரியாவிடம் ஏற்கெனவே பேசப்பட்டது. இதுவொரு சோதனை முயற்சி என்பதை அவரிடம் சொன்னபோது அதற்கு ஏற்ப செயல்பட ஒப்புக்கொண்டார். போன் மூலமே எப்படி போஸ் தரவேண்டும் என்று சொன்னேன். கண்ணாடிக்குப் பின்னால் நிற்கும் அவரை தூரத்திலிருந்து படமெடுப்பது கடினமான விஷயம்தான் ஆனால் அதற்கேற்ற டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. அந்த முறையை இந்த போட்டோ ஷூட் நடத்தப் பயன்படுத்தப்பட்டது. அந்த முயற்சி நன்றாகவே வந்திருக்கிறதுஎன்றார்..
You'r reading ஜன்னலில் மறைந்திருந்து பார்க்கும் ஆண்ட்ரியா.. கொரோனா ஊரடங்கில் புது முயற்சி.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News