கிருஷ்ணா, ஓவியா திகில் படம் 2ம் பாகம் உருவாகிறது.. லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு..
krishna, oviya horer movie yaamirukka payame sequal will stavrt after
கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன், யோகிபாபு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்த திகில் படம் யாமிருக்க பயமே. வெற்றிப் படமாக அமைந்த இதனை டிகே இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 6 வருடம் ஆகும் நிலையில் இதன் அடுத்த பாகம் அதாவது யாமிருக்க பயமே 2ம் பாகம் உருவாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறும்போது,யாமிருக்க பயமே படத்தின் 2 ம் பாகம் உருவாக்குவது பற்றி பேச்சு நடந்து வருகிறது. லாக் டவுன் முடிந்த பிறகு இதன் படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கும் என்றார். ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தைத் தயாரிக்க உள்ளார் எல்ரெட் குமார்.
You'r reading கிருஷ்ணா, ஓவியா திகில் படம் 2ம் பாகம் உருவாகிறது.. லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News