கொரோனா தடையால் வெளியூரில் சிக்கிக்கொண்டவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மும்பை முசாபர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு பெண் திடீரென்று இறந்தார். அம்மா இறந்தது தெரியாமல் அவரது 2 வயதுக் குழந்தை அவரை எழுப்பியபடி அழுதுகொண்டிருந்தது. உருக்கமான இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவியது. அதைக்கண்ட ஷாருக்கான் உடனடியாக அந்த குழந்தை பற்றி தகவல் விசாரித்து அக்குழந்தையைத் தனது அறக்கட்டளை சார்பில் தத்தெடுத்து கொண்டார்.