கமல்ஹாசன் நாமே தீர்வு புதிய இயக்கம் தொடக்கம்.. சென்னையை கொரோனா நகரமாகாமல் தடுப்போம்..

MKK President Kamal begins Naame Theervu

by Chandru, Jun 5, 2020, 18:31 PM IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா காலத்தில் தனிமையிலிருந்தாலும் வீடியோ மூலம் தொண்டர்களையும். கட்சியினரையும். திரையுலகினரையும் தொடர்புகொண்டு வருகிறார். இன்று ஜூம் வீடியோ மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். இதில் கொரோனாவை ஒழிக்க நாமே தீர்வுகாண வேண்டும், சென்னை நகரை கொரோனா நகரமாகாமல் காப்பாற்ற வேண்டும் என்றார்.


அவர் இந்த சந்திப்பில் கூறியதாவது: வெளியூர்களிருந்து தொழில் நிமித்தமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் வருமானமின்றி தங்க இடமின்றி, உணவின்றி தவிப்பதுடன் அதிலிருந்து பிழைக்க தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் அவர்களை மற்றும் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள். செயலாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு எதிராக அரசின் செயல் திட்டத்தை இனியும் விமர்சிக்க நேரம் கிடையாது. அதற்குப் பதிலாக நாமே தீர்வு என்பதை மக்கள் உணர வேண்டிய நேரம் வந்துள்ளது.

மனிதக்குலம் பல தொற்று நோய்களிலிருந்து போராடித் தப்பிப்பிழைத்ததாக வரலாறு கற்பித்திருப்பதால், கொரோனா வைரஸ் மரணத்தால் பாதிக்கப்பட்டால் அதிலும் தப்பி பிழைப்போம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். சென்னை மருத்துவ நகரம் என்ற பெயரிலிருந்து கொரோனா நகரமாக மாறுவதைத் தடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும் அந்த இயக்கத்தின் முதல் ஊழியர் நான் அனைவரும் என்னுடன் கைகோருங்கள்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

You'r reading கமல்ஹாசன் நாமே தீர்வு புதிய இயக்கம் தொடக்கம்.. சென்னையை கொரோனா நகரமாகாமல் தடுப்போம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை