15 ரூபாய் வாடகை வீட்டில் வாழ்ந்த சிவகுமார்.. லட்சியத்துடன் பொன்னான நாட்கள்..

Actor Sivakumaar shared Old Memories

by Chandru, Jun 12, 2020, 18:11 PM IST

நடிகர் சிவகுமார் கோவை பகுதி கிராமத்திலிருந்து சென்னை வந்து சினிமா நடிகராகி படிப்படியாக உயர்ந்தவர். சூர்யா, கார்த்தி நடிக்க வந்த பிறகுத் தனது நடிப்பை நிறுத்தி விட்டார். ஆன்மிக சொற்பொழிவில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் கஷ்டப்பட்ட காலத்தில் புதுப்பேட்டையில் 15 ரூபாய் வாடகை வீட்டிலிருந்த பழைய நினைவை அந்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்தபடி புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார்.அந்த வீட்டில் அவர் நிற்கும்போது அந்த புகைப்படம் ஆயிரம் கதைகள் பேசுகிறது.


அதுபற்றி சிவகுமார் என்ன சொன்னார் தெரியுமா..?1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு...7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்...ஓவியக்கல்லூரி 6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்....இந்தியாவில் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- ..குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னான நாட்கள்
இவ்வாறு சிவகுமார் கூறியிருக்கிறார்.

You'r reading 15 ரூபாய் வாடகை வீட்டில் வாழ்ந்த சிவகுமார்.. லட்சியத்துடன் பொன்னான நாட்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை