சுஷாந்த் மனப்போராட்டதை யாரும் அறிந்ததில்லை.. நடிகை பூ பார்வதி அனுதாபம்..
Parvathy on Sushants death: We may never know his battles
பூ ,சென்னையில் ஒரு நாள், பெங்களூரூ நாட்கள் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. அவர் இந்தி நடிகர் சுஷாந்த் மரணம் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.பார்வதி கூறியிருப்பதாவது:சுஷாந்த் சிங் ராஜ்புத் சில அற்புதமான படங்களை நமக்கு வழங்கியதற்காகக் கொண்டாடப் பட வேண்டிய நடிகர். அவர் தனது உணர்வுகளுக்கு உண்மையாக இருந்திருக்கிறார். அவரது போராட்டத்தை நாம் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.
ஆனாலும் அவருக்கான மரியாதையைத் தொடர்ந்து தரவேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடனும் அதிக நெருக்கமில்லாதவருடனும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். அவர்களைப் பற்றியும் அறியுங்கள், உங்களையும் நீங்கள் சோதித்துக் கொள்ளுங்கள்.. போன் மூலமோ அல்லது மெசேஜ் மூலமோ தெரிந்துகொள்ளுங்கள். நான் என்னைச் சோதித்துவிட்டேன்.இவ்வாறு கூறி உள்ளார்.
ஒவ்வொருவருக்கும் ஒருவித மன அழுத்தம் இருக்கும் அந்த மன அழுத்தத்தைத் தெரிந்துக் கொண்டு அதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்பதைத் தனது மெசேஜ் மூலம் உணர்த்தியிருக்கிறார் பார்வதி.
You'r reading சுஷாந்த் மனப்போராட்டதை யாரும் அறிந்ததில்லை.. நடிகை பூ பார்வதி அனுதாபம்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News