கொரோனாவிலிருந்து குணம் அடைய விஷால் எடுத்துக்கொண்ட மாத்திரை என்ன? வீடியோவில் பகிர்ந்து கொண்டார்..

What pill did Vishal take to recover from Corona?

by Chandru, Jul 28, 2020, 10:46 AM IST

நடிகர் விஷால் அவரது தந்தை ஜிகே ரெட்டி மற்றும் மேலாளர் ஹரி ஆகிய மூவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டனர். அவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்திருக்கின்றனர். இது குறித்து நடிகர் விஷால் தாங்கள் 3 பேரும் குணமானது எப்படி என்பதை வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:எல்லோருக்கும் வணக்கம்! இந்த வீடியோ நான் நன்றாக இருக்கிறேன் என்பதைச் சொல்வதற்காக அல்ல, நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஒரு இக்கட்டான கட்டத்திலிருந்து மீண்டு வந்தது எப்படி என்பதைச் சொல்வதில் தவறில்லை.

என் தந்தைக்கு கொரோனா உறுதியானது உண்மை. ஆனால் நான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அதற்காக மருத்துவமனையைக் குறை சொல்லவில்லை வீட்டிலேயே அப்பாவை வைத்துக் கவனித்துக் கொண்டேன். அவரை உடன் இருந்து பார்த்துக் கொண்டபோது எனக்கும் அதே அறிகுறிகள் தோன்றியது. எனக்கு ஜுரம், காய்ச்சல் மற்றும் சளி வந்தது. ஆனால் அன்றிரவு யாரிடமும் சொல்லவில்லை என்ன அப்பா எடுத்துக் கொண்ட மாத்திரையை நானும் எடுத்துக் கொண்டேன். எனது மேலாளர் ஹரிக்கும் அதே அறிகுறிகள் தோன்றியது, நாங்கள் ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட நான்கு நாட்களில் குணமடைந்து விட்டோம். ஜுரம் குறைந்து அறிகுறிகள் குறைந்து ஏழு நாட்களில் முற்றிலும் குணமாகிவிட்டோம். ஆயுர்வேத மருந்தால் தான் நாங்கள் குணமானோம். இது ஏதோ ஆயுர்வேதி மருந்தை விளம்பரப்படுத்துவதற்காகச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். மற்ற மருந்துகளை நான் குறை சொல்ல இதை நான் கூறவில்லை. எங்களை என்ன மருந்து காப்பாற்றியது என்பதைச் சொல்வதற்காகவே இதைக் குறிப்பிட்டேன். என்ன மருந்து சாப்பிட்டேன் என்பதை டிவிட்டரிலும் தெரிவித்திருக்கிறேன்.

எங்களுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் ஹரிக்கு எனது இதயப்பூர்வமான நன்றி. டாக்டர்களை நான் தெய்வமாகத் தான் பார்க்கிறேன். என் அப்பாவுக்கு 82 வயதாகிறது டாக்டர் என்ற கடவுள் வந்து அவர் முதலில் கொடுத்த மாத்திரை தைரியம். அதன் பிறகு தான் மாத்திரை.அனைவருக்கும் முதல் மாத்திரை கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் சரி தைரியத்தை மட்டும் கைவிடக்கூடாது . தைரியம் இல்லாவிட்டால் அது பல இக்கட்டான சூழலில் கொண்டு போய்விடுகிறது. மருந்து அந்தளவுக்கு வேலை செய்யாது. கொரோனாவுக்கு முக்கிய மருந்து தைரியம் தான் . கண்டிப்பாக கொரோனா வைரஸை எதிர்த்து நான் போராடுவேன் என்ற நம்பிக்கையுடன் மருந்துகள் எடுத்துக் கொண்டால் நாம் குணமாகலாம் அதுதான் என் தந்தையைக் குணமாக்கியது, அதே நம்பிக்கை தான் என்னையும் குணமாகியது. நான் எனது தந்தை மேலாளர் ஆரி ஆகிய மூவரும் தனிமைப் படுத்திக் கொண்டு மாத்திரையை எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு அதிலிருந்து நான் நாங்கள் இப்போது மீண்டும் பணிக்கு வரத் தயாராக உள்ளோம். தைரியமாக இருங்கள் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் இதை நான் இப்போது சொல்வதற்குக் காரணம் எந்த டாக்டருக்கும் எந்த மருந்துக்கும் விளம்பரம் தருவதற்காக அல்ல ஒரு மனிதாபிமான அடிப்படையில் மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியத்துக்காக இதைச் சொல்கிறேன் இப்போது கூட இதனைச் சொல்லா விட்டால் எனக்குத் தூக்கமே வராது.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

https://business.facebook.com/169595287118921/videos/1388526918007527/

You'r reading கொரோனாவிலிருந்து குணம் அடைய விஷால் எடுத்துக்கொண்ட மாத்திரை என்ன? வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை