நெட்டில் லீக் ஆன ரஜினியின் அண்ணாத்த பட கதை..

Rajinikanth Annaththa Story Leak online

by Chandru, Jul 30, 2020, 13:30 PM IST

தர்பார் படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படம் குடும்ப கதையாக உருவாகிறது. மீனா, குஷ்பு, நயன்தாரா என ரஜினியுடன் ஏற்கனவே பிற படங்களில் நடித்துள்ள பிரபல நடிகைகள் இதில் ஜோடி சேர்ந்திருப்பதுடன் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக ரஜினி படத்தில் இணைகிறார்.

இந்நிலையில் இப்பட்டத்தின் கதை என்று சொல்லி ஒரு தகவல் நெட்டில் வெளியாகி வருகிறது. ரஜினியை மீனா, குஷ்பு போட்டிப் போட்டு காதலிக்கின்றனர். இருவருமே ரஜினி மீது அதிக பிரியமும், காதலும் வைத்திருக்கின்றனர். இவர்களில் யாரையாவது ஒருவரை மணந்தால் இன்னொருவருக்கு மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் அவர்கள் இருவருக்குப் பதிலாக வேறுவொரு பெண்ணை ரஜினி மணக்கிறார். அவருக்குப் பிறக்கும் மகளை தங்கள் பிள்ளைகளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று பின்னர் மீனா. குஷ்புவுக்குள் போட்டி ஏற்பட அதில் ரஜினியின் மகளான கீர்த்திசுரேஷ் யார் வீட்டுப் பிள்ளையை மணந்தார் என்று கதை செல்கிறதாம்.

ரஜினிகாந்த் முழு நீள குடும்ப பாங்கான கதையில் நடித்து நீண்ட நாள் ஆகிவிட்டதால் அண்ணாத்த படத்தை முற்றிலும் குடும்ப பாங்கான கதையாக இயக்குனர் சிவா அமைத்திருக்கிறாராம். அத்துடன் தேவையான இடத்தில் ஆக்‌ஷன் பஞ்ச் வசனங்களும் உள்ளதாம்.கொரோனா ஊரடங்கால் நடிகர்கள் சம்பளம் குறைத்து வருகின்றனர். அதுபோல் ரஜினியிடமும் இப்படத்துக்கு சம்பளம் குறைக்கக் கேட்டதாகவும் ஆனால் ரஜினி மறுத்து படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக வதந்தி பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது

You'r reading நெட்டில் லீக் ஆன ரஜினியின் அண்ணாத்த பட கதை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை