பாலியல் தொல்லையை எதிர்கொள்ள துணிச்சல் வேண்டும்-நண்பன் நடிகை பேட்டி

Mar 15, 2018, 16:56 PM IST

இளையதளபதி விஜய்யுடன் நண்பன் படத்தில் ஜோடிபோட்டவர் இலியானா. தெலுங்கு படங்களை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், இலியானா சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்," சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது உண்மை தான்! வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னாள் அந்த குறிப்பிட்ட தென்னிந்திய நடிகையை வாய்ப்புக்காக அந்த பெரிய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்துள்ளார். அவரிடம் இருந்து எப்படி தன்னை காப்பற்றிக்கொள்வது என்பது பற்றி என்னிடம் ஆலோசனை கேட்டார்.

என்னை கேட்டால் அந்த நடிகைக்கு எது நல்லது என்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். எனது முடிவை அவரிடம் திணிக்க முடியாது. நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லக்கூடாது.

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகை வெளியே சொன்னால் அந்த நடிகையின் சினிமா வாழ்க்கையே முடிந்து விடும் என்ற பயம் இருக்கிறது. இதுவே. வெளியில் துணிச்சலாக சொன்னால் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்" என்று அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பாலியல் தொல்லையை எதிர்கொள்ள துணிச்சல் வேண்டும்-நண்பன் நடிகை பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை