`என்னை யாராலும் கணிக்க முடியாது! – இது கேப்டன் அஷ்வின் பன்ச்

by Rahini A, Mar 15, 2018, 16:37 PM IST

ஐபிஎல் தொடரில் முதன்முறையாக கேப்டனாக களம் காணப் போகிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்தர் அஷ்வின்.

இது குறித்து அவர், `நான் யாராலும் கணிக்க முடியாத கேப்டனாக இருப்பேன்’ என்று பன்ச் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் பல்லாண்டுகாலம் தனது சுழற்பந்து வீச்சு வித்தையில் ஜொலித்தவர், ஜொலித்துக் கொண்டு இருப்பவர் அஷ்வின்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான ஸ்பின் பௌலராக 8 சீசன்கள் விளையாடிய அஷ்வின், தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக களமிறங்கப் போகிறார். இது குறித்து அவர் பேசுகையில், `இது ஒரு புது சவால். என்னைப் பொறுத்தவரையில், நான் யாராலும் கணிக்க முடியாதவனாக செயல்படுவேன். எனது அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரிலும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மிடில் ஆர்டரிலும் களம் காணுவர்.

பல்வேறு கேப்டனுகளுக்குக் கீழ் நான் விளையாடியுள்ளேன். எங்கள் அணியிலேயே இருக்கும் சேவாக் மற்றும் யுவராஜ் ஆகியோருக்குக் கீழேயும் நான் விளையாடியுள்ளேன். அவர்கள் அனைவரும் எனக்குக் கற்றுக் கொடுத்ததை நான் செவ்வனே களத்தில் செய்து காட்டுவேன்’ என்று நம்பிக்கை உதிரப் பேசியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading `என்னை யாராலும் கணிக்க முடியாது! – இது கேப்டன் அஷ்வின் பன்ச் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை