தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட்டுக்கு அரசு அனுமதி.. மாஸ்டர், ஈஸ்வரன் பொங்கல் விருந்து..

by Chandru, Jan 4, 2021, 14:41 PM IST

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்தது. ஊரடங்கு தளர்வில் சினிமா ஷூட்டிங் உள்ளிட்ட பல் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் புதிய படங்கள் வெளியிட முடியாமல் முடங்கியது. சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மூக்குத்தி அம்மன் போன்ற பல படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. தியேட்டர்கள் திறக்க தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது.

இதனால் பெரிய படங்களான மாஸ்டர் போன்றவை ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது. தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களாகவே தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு கோரிக்கை வைத்தார். அதே போல் நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு போன்றவர்களும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழக அரசு 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கி அறிவித்துள்ளது.

இது தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பொங்கல் தினத்தையொட்டி நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவர் 13ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். அதேபோல் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

You'r reading தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட்டுக்கு அரசு அனுமதி.. மாஸ்டர், ஈஸ்வரன் பொங்கல் விருந்து.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை