நீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..

by Chandru, Jan 21, 2021, 12:19 PM IST

1990களில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தவர் நடிகை குஷ்பு. தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். அவருக்கு ஒரு ஊரில் ரசிகர்கள் கோயில் கூட கட்டினார்கள். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில் அவர் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு டிவியில் நடிக்கத் தொடங்கினார். டிவி ஷோக்களும் நடத்தினார். பிறகு அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியிலிருந்த அவர் சில மாதங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார்.

சுந்தர் சி. இன்று பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு டிவிட்டரில் உருக்கமான மெசேஜ் பகிர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது: பிறந்த வாழ்த்துக்கள். நான் வாழும் எல்லா நேரமும் சந்தோஷமாக வாழ்கிறேன். எனக்கு என்ன தேவையோ அதெல்லாமும் கொடுத்திருக்கிறீர்கள். ஒரு குடும்பம். நீங்கள் இல்லாமலிருந்தால் நான் அதை இழந்திருப்பேன். என் அன்பே உன்னை காதலிக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். உருக்கமான மெசேஜ் வெளியிட்ட குஷ்பு அத்துடன் இரண்டு படங்களை பகிர்ந்திருக்கிறார். ஒன்றில் சுந்தர் சிக்கு பிறந்த நாளுக்கு கேக் தந்திருக்கிறார் மற்றொரு படத்தில் ஆசையாகக் கணவருக்கு முத்தப்பரிசு அளிக்கிறார்.

சுந்தர் சி-குஷ்பு திருமணம் 2000ம் ஆண்டில் நடந்தது. அவந்திகா, அனந்திகா என 2 மகள்கள் உள்ளனர். சுந்தர் சி தற்போது அரண்மனை 3ம் பாகம் இயக்கி வருகிறார். நடிகை குஷ்பு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் குஷ்பு சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார். பிரசாரங்களில் ஈடுபட உள்ள அவர் தேர்தலில் வேட்பாளராகவும் நிற்பார் என்று தெரிகிறது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், தேர்தலில் நான் போட்டியிடத் தயார். அதுபற்றி அறிவிப்பைக் கட்சித் தலைமை தான் வெளியிடும். மு.க.ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் நிற்பீர்களா என்கிறார்கள். நான் போட்டியிடத் தயாராக உள்ளேன் என்றார்.

You'r reading நீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை