ஒரே நாளில் தியேட்டர், ஒடிடியில் தனுஷ் படம் ரிலீஸ்? ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம்..

by Chandru, Feb 2, 2021, 15:56 PM IST

கொரோனா ஊரடங்கால் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. இது தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெயம் ரவி நடித்த பூமி, ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள், நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன். கீர்த்தி சுரேஷ் நடித்த பெண் குயின் போன்ற பல படங்கள் ஒடிடியில் வெளியானது.ஒடிடியில் தங்கள் படங்களை வெளியிடும் பட நிறுவனங்களின் அடுத்தடுத்து தயாரிக்கும் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது, பலர் வேலை இழந்துள்ளனர். எனவே தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரி வந்தனர். இந்த நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் படம் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படமும் ஒடிடியில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று விஜய்க்கும், தனுஷுக்கும் தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைத்தனர். அதையேற்று இரண்டு படங்களும் ஒடிடி தளத்துக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்றதால் மறுபடியும் மாஸ்டர், ஜெகமே தந்திரம் தள்ளிப்போனது.

100 சதவீத டிக்கெட் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாஸ்டர் படம் பொங்கல் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. முதலில் 100 சதவீத டிக்கெட்டுக்கு அனுமதி கொடுத்த அரசு எதிர்ப்பு எழுந்ததால் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்று அறிவித்தது. இந்த நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி ரூ 200 கோடி வசூல் சாதனை செய்தது. ஆனால் ஜெகமே தந்திரம் ரிலீஸ் ஆகவில்லை. பிப்ரவரியில் இப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இப்படம் ஒடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களையும், தியேட்டர் அதிபர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நெட் பிளிக்ஸில் இப்படம் வெளியாகவிருக்கிறது. ஆனால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வில்லை.தற்போது ஜெகமே தந்திரம் பற்றி மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் படத்தை நேரடியாக ஒடிடியில் வெளியிடும் முடிவை மறுத்தனர், தற்போது ஜெகமே தந்திரம் பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இப்படம் பெரிய திரைகளில் ரசிக்கும்படி படமாக்கப்பட்டுள்ளது. எனவே, தயாரிப்பாளர் இந்த படத்தை ஒரே நாளில் இந்தியாவில் தியேட்டர் மற்றும் ஒடிடியில் வெளியிட முயன்று வருகிறார்.ஏனெனில் அரசாங்கம் சமீபத்தில் 100 சதவீத டிக்கெட் அனுமதியை வழங்கி இருக்கி றது. அனுமதித்தது. எனவே தியேட்டர் கலெக்‌ஷன் குறைய வாய்ப்பில்லை. அதேநேரம் ஒடிடியில் படம் வெளியானால் தயாரிப்பாளருக்குக் கூடுதல் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதை தியேட்டர் அதிபர்கள் ஏற்பது சந்தேகமே. ஏற்கனவே ஒடிடியில் வெளியான பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பை தியேட்டரில் திரையிட மறுக்கும் நிலையில் ஒரே நாளில் தியேட்டர், ஒடிடியில் படத்தை ரிலீஸ் செய்வதை ஏற்பார்களா என்பது கேள்விக் குறியாக உள்ளது. இது ரசிகர்களை மீண்டும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

You'r reading ஒரே நாளில் தியேட்டர், ஒடிடியில் தனுஷ் படம் ரிலீஸ்? ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை