பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்திலிருந்து காலியாக உள்ள மைய நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 2
கல்வி தகுதி:
மைய நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் – இளங்கலை சட்டம் பட்டப்படிப்பு அல்லது முதுகலை சமூக சேவை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – Humanities & Social Science/ Social Work பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
மைய நிர்வாக அலுவலர் – 30,000/-
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – 20,000/-
தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 05.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
எண்: 43 காந்தி நகர், 2 வது மாடி,
காஞ்சிபுரம் - 631501.
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவங்கள் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/02/2021012915.pdf
https://tamil.thesubeditor.com/media/2021/02/2021012929.pdf
You'r reading பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil
More Employment News