மாணவர்களுக்கு செக்ஸ் தொல்லை - கணவனால் சிக்கிக்கொண்ட அரசு பள்ளி ஆசிரியை

government school teacher arrested sexually harassing students

by Sasitharan, Mar 21, 2019, 20:00 PM IST

பொள்ளாச்சி விவகாரம் பற்றி எரிந்து வரும் இந்நிலையில் நாகர்கோவிலில் கல்லூரி நிறுவனர் ஆசிரியைகளின் உதவியுடன் மாணவிகள் மற்றும் சக ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியது. தொடர்ந்து பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தமிழகத்தை உலுக்கி வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த நித்யா-உமேஷ்குமார் தம்பதியினர். இவர்கள் இருவருமே ஆசிரியராக வேலை பார்த்து வருபவர்கள். இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நித்யா பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக, 6 மாதங்களுக்கு முன்பு கணவர் உமேஷ்குமாரே மாவட்ட கலெக்டரிடம் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து மாணவர்களிடம் மாவட்ட குழந்தைகள் நலவாரியம் விசாரணை நடத்தியது. இதில் நித்யா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது ஆசிரியை நித்யா போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆசிரியை நித்யா பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

 

You'r reading மாணவர்களுக்கு செக்ஸ் தொல்லை - கணவனால் சிக்கிக்கொண்ட அரசு பள்ளி ஆசிரியை Originally posted on The Subeditor Tamil

More District news News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை