சட்டக்கல்லூரி மாணவரை கம்பி, செங்கலால் அடித்துக் கொன்ற சம்பவம் - டிக்கெட் பரிசோதகர் கைது

அலகாபாத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக டிக்கெட் பரிசோதகரை கைது செய்துள்ள காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் திலீப் சரோஜ், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று ஒரு உணவு விடுதியின் முன்பாக சில இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்டார்.

இரண்டு இளைஞர்கள் சரோஜை ஹாக்கி மட்டையாலும், இருப்பு கம்பி மற்றும் செங்கற்களாலும் தாக்கும் வீடியோ அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. பின்னர், இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் பலத்த காயமடைந்த சரோஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை கண்டித்து அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் அரசு பேருந்துக்கு தீ வைத்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சரோஜின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே இது தொடர்பாக 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக ரயில்வே டிக்கெட் பரிசோதகர் விஜய் சங்கர் சிங் என்பவரை அங்குள்ள விடுதி ஒன்றில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds