ஷாகீன்பாக் போராட்டம்.. டெல்லி போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..

by எஸ். எம். கணபதி, Feb 10, 2020, 13:10 PM IST

டெல்லி ஷாகீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷாகீன்பாக் என்ற பகுதியில் இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள்.

ஷாகீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது காவல்துறை பொறுப்பு. நாங்கள் உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அமித்சஹானி என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ஷாகீன்பாக் பகுதியில் உள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 10ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறோம் என்று கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்ேபாது நீதிதி எஸ்.கே.கவுல் கூறுகையில், எத்தனை நாளைக்குத்தான் பொது மக்கள் பயன்படுத்தும் சாலையை முடக்கி வைப்பீர்கள்? என்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

இதன்பின், டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல் துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின், வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

You'r reading ஷாகீன்பாக் போராட்டம்.. டெல்லி போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை