டேராடூனில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்..

3 killed as building collapses in Dehradun, many feared trapped.

by எஸ். எம். கணபதி, Jul 15, 2020, 10:34 AM IST

டேராடூனில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தராகாண்ட் மாநிலம், டேராடூன் அருகே சுக்குவாலா என்னும் இடத்தில் பழைய கட்டிடம், இன்று(ஜூலை15) அதிகாலையில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில மீட்புப் படையினர் உடனடியாக அங்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளிலிருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. மீட்புப் படையினர், கட்டிட இடிபாடுகளை அகற்றித் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You'r reading டேராடூனில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை